இரண்டாவது தடுப்பூசியின் பாதுகாப்பு மூன்று மாதங்களின் பின்னர் குறைவடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட 3 மாதங்களின் பின்னர் பாதுகாப்பு தன்மை குறைவடைந்து நோய் பரவலடையும் தன்மை அதிகரிக்கலாம்
என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு ஒவ்வாமை மற்றும் உயிரியல் மூலக்கூறு பிரிவின் பணிப்பாளர் வைத்தியா் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
முழுமையாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் டெல்டா தொற்றுக்கு உள்ளாகும் பட்சத்தில், அல்பா தொற்றினால் ஏற்படும் பாதிப்பை விட இரண்டு மடங்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் விளக்கமளித்துள்ளதாவது,
இரண்டு முறை தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஒருவருக்கு டெல்டா தொற்று ஏற்படுமாயின் அவரிடமிருந்து தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு பரவலடையும் தன்மை குறைவடையும்.
ஆனால் இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட 3 மாதங்களின் பின்னர் பாதுகாப்பு தன்மையானது குறைவடைதாகவும், டெல்ட்டா தொற்று பரவலடையும் தன்மை அதிகரிக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a comment