21 61ab7a7969ca1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கேலிக்கூத்தாகும் காலிமுகத்திடல் போடட்டக்களம்! – வீரவன்ஸ குற்றச்சாட்டு

Share

காலிமுகத்திடல் போராட்டம் ஆரம்பத்தில் நியாயமான மக்கள் போராட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது தற்போது பைத்தியகாரத்தனமான, போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் மோசடியாளர்களின் கூட்டாக மாறியுள்ளது என்று விமல் வீரவன்ச எம் பி. சபையில் நேற்று கடுமையாக சாடினார்

நாட்டை அராஜக நிலைமைக்கு மாற்ற பைத்தியகாரர்கள் போன்று செயற்படும் போராட்டம் தொடர்பில் ஏன் இன்னும் பொறுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்? எனவும் அவர் சபையில் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று விஷேட கூற்றுஒன்றை முன்வைத்து உரையாற்றிய அவர், அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:

இயற்கை பசளை பயிர் செய்கை போன்ற சிறந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட காலிமுகத் திடல் போராட்டம் தற்போது இரசாயன பயிர் செய்கைக்கு ஏற்பட்ட நிலைமை போல் மாறியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் இலங்கைக்கு வந்திருந்த போது, அவர்களின் நடவடிக்கைகளுக்கு காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் தடையேற்படுத்தினர்.

நாடு ஸ்திரமற்ற நிலைமையில் இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தி நாணய நிதியத்திடம் உதவி பெற்றுக்கொள்வதை தடுப்பதே போராட்டகாரர்களின் நோக்கம்.போராட்டகாரர்கள் நாட்டை அராஜக நிலைமைக்கு மாற்ற பைத்தியகாரர்கள் போன்று செயற்படும் போது ஏன் இன்னும் பொறுத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என வினவினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...