ராஜபக்ச குடும்பத்தினர்
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்ச குடும்பம் இனி வீதியில் இறங்கவே முடியாது! – ஜே.வி.பி. தெரிவிப்பு

Share

ராஜபக்ச குடும்பத்தினர் வீதியில் இனிமேல் இறங்க முடியாது என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நாட்டில் தனி ஒரு குடும்பமாக இருக்கும் திருடர்களைப் பாதுகாப்பதற்குப் பொலிஸாரும் இராணுவத்தினரும் துணை போகவேண்டாம் என்று கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம்.

ராஜபக்ச குடும்பத்தினர் நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்கு இடமளிக்காத வகையில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கின்றேன்.

ராஜபக்ச குடும்பத்தினர் வீதியில் இனிமேல் இறங்க முடியாது. அவர்கள் ஹோட்டல்களிலோ, வீடுகளிலோ, எங்கேனும் தனி அறைகளிலோ அல்லது நிலத்தின் கீழான பங்கர்களிலோ பதுங்கியிருக்க முடியுமே தவிர வெளியில் அவர்கள் தலைகாட்ட முடியாது.

அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றாலும் வெளிநாட்டுப் பொலிஸாரின் உதவியோடு அல்லது வெளிநாட்டுத் தூதரகங்களின் உதவியோடு அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவோம்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...