அரசு தலையிட்டால் பாண் விலையை குறைக்க முடியும்!

Bakery Products

அரசாங்கம் தலையிட்டு மா, முட்டை மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றின் விலைகளைக் கட்டுப்படுத்தி குறைத்தால், பாண் மற்றும் பணிஸின் விலையை ரூ. 50 மற்றும் ரூ.25 ஆக குறைக்கமுடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்க (ACBOA) தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், இப்போது ஒரு முட்டையின் விலை ரூ.65க்கு விற்கப்படுகிறது. “ஒரு மூட்டை மாவின் விலை கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் சீராக ஏறிக்கொண்டிருக்கிறது. எண்ணெயின் சந்தை விலை நிச்சயமாக எங்களால் எட்ட முடியாததாக இருக்கும்.

சந்தையில் கோதுமை மாவின் விலையில் கட்டுப்பாடு இல்லை. சந்தையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு இருப்பதாகக் கூறி டீலர்கள் மற்றும் ஏஜென்சிகள் தங்கள் விருப்பப்படி விலையை உயர்த்துகிறார்கள்.

எனவே, பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version