கண்டி, நுவரெலியா மற்றும் அநுராதபுரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளை ஆடம்பர ஹோட்டல்களாக மாற்றியமைத்து, உயர்தர சுற்றுலா பயணிகளுக்கு திறக்குமாறு சுற்றுலா சாரதி வழிகாட்டி விரிவுரையாளர்கள் சங்கம், அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
வருடத்திற்கு ஒரு முறை கூட மேற்படி மாளிகைகளுக்கு ஜனாதிபதி விஜயம் செய்யாத சந்தர்ப்பங்களும் உண்டு எனவும், இவ்வாறான சூழ்நிலையில் இந்த மாளிகைகளை பராமரிப்பது மக்களின் பணம் விரயமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment