1599582341 president 2
செய்திகள்இலங்கை

உலகத் தலைவர்களை ஜனாதிபதி சந்திக்கிறார் !

Share

உலகத் தலைவர்களை ஜனாதிபதி சந்திக்கிறார் !

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ச  ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டு அமர்வில் உரையாற்றவுள்ளார்.

இலங்கையின் மனித உரிமை தொடர்பாக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக  ஜனாதிபதியின் உரை அமையவுள்ளது.

இத் தகவலை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றால் பாதிப்படைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புதல், பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியிலான வீழ்ச்சியை சரி செய்ய முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் அரச தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தை தனித்தனியாக சந்திக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது,

மேலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடன் முக்கிய பல விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கவுள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள இலங்கைக்கு ஆதரவான நாட்டுத் தலைவர்களை சந்திக்கவுள்ள ஜனாதிபதி அவர்களுடனும் முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார் எனவும் ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...