செய்திகள்அரசியல்இலங்கை

பங்காளிக் கட்சிகளை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி

Share
gotta
Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், அரச பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது.

மாலை 5.30 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார்.

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமைக்கு பங்காளிக்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

இது சம்பந்தமாக ஜனாதிபதியை சந்திக்கவும் திட்டமிட்டன. எனினும், ஜனாதிபதி சந்திப்புக்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதனால் கொதிப்படைந்த பங்காளிக்கட்சிகள், ‘மக்கள் சபை’ எனும் தலைப்பின்கீழ் மக்கள் சந்திப்பை நாளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தன. இந்நிலையிலேயே பங்காளிகளை இன்று ஜனாதிபதி அவசரமாக சந்திக்கிறார்.

இச் சந்திப்பையடுத்து மக்கள் சபைக்கூட்டத்தை பங்காளிகள் கைவிடக்கூடும் என தெரியவருகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...