பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி மக்கள் கையெழுத்து திரட்டும் ஆவணத்தில் பதுளை மாவட்ட மக்கள் இன்று கையொப்பம் இட்டனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கையை இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.
இதன் ஓர் அங்கமாக இன்று பதுளை நகரில் கையெழுத்து திரட்டப்பட்டது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேசும் பங்கேற்று, கையொப்பம் இட்டார்.
#SriLankaNews
2 Comments