IMG 20220604 WA0008
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கதிர்காமத்திற்கான பாதயாத்திரை செல்வச்சந்நிதியிலிருந்து ஆரம்பம்!

Share

கதிர்காமத்திற்கான பாதயாத்திரை தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து இன்று காலை ஆரம்பமாகியது.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் நீண்ட காலமாக கதிர்காம கந்தன் ஆலய உற்சவத்தின் போது வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து பாத யாத்திரை மேற்கொண்டு, முருகனின் வேலினை எடுத்துச்சென்று நடையாக சென்று கதிர்காம கந்தனை பக்தர்கள் வழிபடுவது வழமை.

இவ்வருடத்திற்கான பாதயாத்திரை இன்று காலை செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று பாத யாத்திரை ஆரம்பமாகியது குறித்த பாதயாத்திரையில் நூற்றுக்கணக்கான முருக பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று ஆரம்பமாகிய பாதயாத்திரை பருத்தித்துறை நகரினை சென்றடைந்து பின்னர் A9 வீதி வழியாக கிளிநொச்சியை சென்றடைந்து பின்னர் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தில் கலந்து கொண்ட பின் தொடர்ந்து பாதையாத்திரை நகர்ந்து கதிர்காமத்தை சென்றடையவுள்ளது.

IMG 20220604 WA0010 IMG 20220604 WA0012 IMG 20220604 WA0005 IMG 20220604 WA0006

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Boat 2 1 e1478846009492
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் சுற்றுலாத்துறை எழுச்சி: 15 நாட்களில் 1.3 இலட்சம் பயணிகள் வருகை – முதலிடத்தில் இந்தியா!

2026 ஆம் ஆண்டின் ஆரம்பமான முதல் 15 நாட்களுக்குள் 131,898 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை...

25 695216a3788ad
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சென்னையில் இருந்து கடத்தி வரப்பட்ட ₹20 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள்: கட்டுநாயக்கவில் மோட்டார் மெக்கானிக் கைது!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டுச் சிகரெட்டுகள் மற்றும் பீடி தொகையுடன் நபர்...

26 696b34410ecde
இலங்கைசெய்திகள்

துபாய் இஷார வலையமைப்பின் 3 முக்கிய ஏஜெண்டுகள் கைது: கம்பளையில் 20 வயது இளைஞர்கள் போதைப்பொருளுடன் சிக்கினர்!

துபாயில் இருந்து இலங்கையின் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வரும் ‘துபாய் இஷார’ என்ற முக்கிய கடத்தல்காரருக்குச்...

images 13 2
செய்திகள்இலங்கை

டித்வா புயல் நிவாரணம்: 3,000 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கல் – வாடகை வீடுகளுக்கும் அரசாங்கம் நிதி உதவி!

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்வி உதவிக் கொடுப்பனவுகள் மற்றும் வீடுகளைச் சீரமைப்பதற்கான மானியங்கள்...