இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கதிர்காமத்திற்கான பாதயாத்திரை செல்வச்சந்நிதியிலிருந்து ஆரம்பம்!

IMG 20220604 WA0008
Share

கதிர்காமத்திற்கான பாதயாத்திரை தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து இன்று காலை ஆரம்பமாகியது.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் நீண்ட காலமாக கதிர்காம கந்தன் ஆலய உற்சவத்தின் போது வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து பாத யாத்திரை மேற்கொண்டு, முருகனின் வேலினை எடுத்துச்சென்று நடையாக சென்று கதிர்காம கந்தனை பக்தர்கள் வழிபடுவது வழமை.

இவ்வருடத்திற்கான பாதயாத்திரை இன்று காலை செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று பாத யாத்திரை ஆரம்பமாகியது குறித்த பாதயாத்திரையில் நூற்றுக்கணக்கான முருக பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று ஆரம்பமாகிய பாதயாத்திரை பருத்தித்துறை நகரினை சென்றடைந்து பின்னர் A9 வீதி வழியாக கிளிநொச்சியை சென்றடைந்து பின்னர் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தில் கலந்து கொண்ட பின் தொடர்ந்து பாதையாத்திரை நகர்ந்து கதிர்காமத்தை சென்றடையவுள்ளது.

IMG 20220604 WA0010 IMG 20220604 WA0012 IMG 20220604 WA0005 IMG 20220604 WA0006

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...