செய்திகள்அரசியல்இலங்கை

9 மில்லியன் ரூபாய் பணத்தில் ஒரேயொரு கழிவறை: என்ன தான் நடக்கிறது நாட்டில்!!!!

Share
Corruption
Share

நாட்டின் தென்பகுதியில் 9 மில்லியன் ரூபாய் பணத்தை செலவிட்டு ஒரு கழிவறை மட்டுமே நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியால் மிகப்பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது.

தென்பகுதியில் கழிவறையின்றி சிரமப்படும் குடும்பங்களுக்கு கழிவறை நிர்மாணித்துக் கொடுப்பதற்காக பெருந்தொகையான பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இருப்பினும் அந்தப் பணத்திற்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை என்ற தகவல்களே இப்போது வெளியாகியுள்ளன.

தென் மாகாணத்தில் 493 குடும்பங்களுக்கு கழிப்பறை வசதியினை ஏற்படுத்தும் விதமாக 9 மில்லியன் ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் 9 மில்லியன் ரூபாய் பணத்தை செலவிட்டு ஒருயொரு கழிவறை மட்டுமே கட்டப்பட்டுள்ளது.

இவ்விடயமானது தேசிய கணக்காய்வு செயலகம் 2020 ஆம் ஆண்டுக்காக வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியாகியுள்ளது.

கழிவறையின்றி சிரமங்களை எதிர்கொள்ளும் 493 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 246 பேருக்காக மட்டுமே இந்த நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. எனினும் கழிவறை கட்டுவதிலும் ஊழல் இடம்பெற்றுள்ளதாகவே தற்போது விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...