Vasudeva Nanayakkara
அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய அரசியல் கூட்டணி மாபெரும் சக்தியாக மாறும்

Share

” எதிர்வரும் 04 ஆம் திகதி உதயமாகவுள்ள புதிய அரசியல் கூட்டணியானது, இந்நாட்டில் தீர்க்கமான அரசியல் சக்தியாக மாறும்.” – என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வி அடைந்த பின்னர், ‘மஹிந்த சூறாவளி’ எனும் வேலைத்திட்டத்தின்கீழ் நாமே அவரை நாமே மீண்டும் களத்துக்கு கொண்டுவந்தோம். அதன் தொடர்ச்சியாகவே கடந்த தேர்தல்களில் மொட்டு கட்சிக்கு பெரும் வெற்றி கிடைத்தது. ஆனால் மக்களுக்கு வழங்கிய ஆணை மீறப்பட்டது.

அன்று மஹிந்த சூறாவளியை உருவாக்கிய சக்திகள் இன்று எம் பக்கம் உள்ளன. எனவே, மலரவுள்ள கூட்டணி தீர்க்கமான அரசியல் சக்தியாக இருக்கும்.” – எனவும் வாசு குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...