Vasudeva Nanayakkara
அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய அரசியல் கூட்டணி மாபெரும் சக்தியாக மாறும்

Share

” எதிர்வரும் 04 ஆம் திகதி உதயமாகவுள்ள புதிய அரசியல் கூட்டணியானது, இந்நாட்டில் தீர்க்கமான அரசியல் சக்தியாக மாறும்.” – என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வி அடைந்த பின்னர், ‘மஹிந்த சூறாவளி’ எனும் வேலைத்திட்டத்தின்கீழ் நாமே அவரை நாமே மீண்டும் களத்துக்கு கொண்டுவந்தோம். அதன் தொடர்ச்சியாகவே கடந்த தேர்தல்களில் மொட்டு கட்சிக்கு பெரும் வெற்றி கிடைத்தது. ஆனால் மக்களுக்கு வழங்கிய ஆணை மீறப்பட்டது.

அன்று மஹிந்த சூறாவளியை உருவாக்கிய சக்திகள் இன்று எம் பக்கம் உள்ளன. எனவே, மலரவுள்ள கூட்டணி தீர்க்கமான அரசியல் சக்தியாக இருக்கும்.” – எனவும் வாசு குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...