ஹிக்கடுவையில் கடலில் மூழ்கி கடற்படை அதிகாரி பலி
இலங்கைசெய்திகள்

ஹிக்கடுவையில் கடலில் மூழ்கி கடற்படை அதிகாரி பலி

Share

ஹிக்கடுவையில் கடலில் மூழ்கி கடற்படை அதிகாரி பலி

ஹிக்கடுவ கடற்பரப்பில் உயிர்காக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை அதிகாரி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(15.08.2023) மாலை இடம்பெற்றுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வத்தளை, டிகோவிட்ட கடற்படை முகாமில் பணிபுரியும் 32 வயதுடைய கடற்படை அதிகாரி ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பலபிட்டிய கடற்படை பயிற்சிப் பாடசாலையானது 30 கடற்படை அதிகாரிகளுக்கான உயிர்காக்கும் பயிற்சி நெறியை ஹிக்கடுவ பன்னம்கொட பகுதியில் நடாத்தியுள்ளதுடன், உயிரிழந்த அதிகாரியும் இதில் பங்குபற்றியுள்ளார்.

மேலும், குறித்த அதிகாரி பயிற்சியின் போது நீரில் மூழ்கி, மீட்கப்பட்டதாகவும், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...