ஹிக்கடுவையில் கடலில் மூழ்கி கடற்படை அதிகாரி பலி
இலங்கைசெய்திகள்

ஹிக்கடுவையில் கடலில் மூழ்கி கடற்படை அதிகாரி பலி

Share

ஹிக்கடுவையில் கடலில் மூழ்கி கடற்படை அதிகாரி பலி

ஹிக்கடுவ கடற்பரப்பில் உயிர்காக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை அதிகாரி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(15.08.2023) மாலை இடம்பெற்றுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வத்தளை, டிகோவிட்ட கடற்படை முகாமில் பணிபுரியும் 32 வயதுடைய கடற்படை அதிகாரி ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பலபிட்டிய கடற்படை பயிற்சிப் பாடசாலையானது 30 கடற்படை அதிகாரிகளுக்கான உயிர்காக்கும் பயிற்சி நெறியை ஹிக்கடுவ பன்னம்கொட பகுதியில் நடாத்தியுள்ளதுடன், உயிரிழந்த அதிகாரியும் இதில் பங்குபற்றியுள்ளார்.

மேலும், குறித்த அதிகாரி பயிற்சியின் போது நீரில் மூழ்கி, மீட்கப்பட்டதாகவும், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...