20220102 111815 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வதேசத்தை ஏமாற்றவே தேசிய பேரவை!

Share

” ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான ஒரு யுக்தியாகவே ‘தேசிய பேரவை’ ஸ்தாபிக்கப்படுகின்றது. இப்படியான பேரவைகளால் பிரச்சினைகள் தீராது. எனவே, முதலில் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

” தேசிய பேரவை” என்பது கண்துடைப்பு நாடகம், அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லெண்ணத்தை கொண்டிருக்கவில்லை.” – எனவும் சிறிதரன் எம்.பி. கூறினார்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது தேசிய பேரவையை ஸ்தாபிப்பதற்கான தீர்மானத்தை பிரதமர் முன்வைத்தார். சபாநாயகரை தவிசாளராகக் கொண்ட இந்த பேரவையில் ஆளும் மற்றும் எதிரணிகளின் சார்பில் 35 எம்.பிக்கள் இடம்பெறலாம். கூட்ட நடப்பெண் 10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரவை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இதற்கு முன்னரும் பல பேரவைகள் அமைக்கப்பட்டன. அவ்வாறு அமைக்கப்படும் குழுக்கள் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதா, எனவே, நீங்கள் அமைக்கும் பேரவைகளில் நாம் எந்த அடிப்படையில் அங்கம் வகிப்பது?

பொருளாதார ரீதியில் அரசாங்கம் சிக்கியுள்ளது. அதேபோல ஜெனிவாவில் இருந்தும் அழுத்தங்கள் வலுத்துள்ளது. இந்நிலையில் உலகை ஏமாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சித்துவருகின்றது. அதற்கானதொரு யுக்தியாக இந்த பேரவை அமையலாம்.

நல்லாட்சியின்போது இந்த நாடாளுமன்றம் அரசியல் நிர்ணயச்சபையாக மாற்றப்பட்டது. அரசியல் தீர்வு தொடர்பில் இடைக்கால அறிக்கையும் முன்வைக்கப்பட்டது. பேச்சுகள் நடத்தப்பட்டன. வரும் ஆனால் வராது என்பதுபோல எதுவும் நடக்கவில்லை.

எனவே, பேரவைகள் அமைக்கும் யோசனைகளை கொண்டுவரவேண்டாம், இந்த நாட்டில் பிரதான பிரச்சினை எது, அதற்கு எப்படி தீர்வை வழங்குவது என்பதை கண்டறியுங்கள். தமிழர்களின் தேசியப்பிரச்சினையை தீர்த்து வைக்காமல், இந்நாட்டில் எதுவும் நடக்கப்போவதில்லை

10 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்காத இந்த அரசாங்கம் எப்படி, தேசிய பேரவை ஊடாக தீர்வை தரும், இது ஒரு பம்மாத்து நடவடிக்கை . பத்தோடு பதினொன்றாக இல்லாமல் போய்விடும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Canned Fish 1200px 22 11 06 1000x600 1
செய்திகள்இலங்கை

டின் மீன் வகைகளுக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை...

AA1QtdSx
செய்திகள்உலகம்

தென் கொரியா சியோனானில் பாரிய தீ விபத்து: இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு 129 தீயணைப்பு வீரர்கள் முயற்சி!

தென் கொரியாவின் தென் சங் சியோங் மாகாணம், சியோனான் நகரம், தொங்னாம்-கு, புசியோங்-ம்யோன் பகுதியில் அமைந்துள்ள...

Dr. Nalinda Jayathissa 2024.08.23 1 1
செய்திகள்இலங்கை

விலை மனுதாரர்களைத் தெரிவு செய்வதில் நடந்த மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியிடப்படும் என...

fc8354edbbb9260d3534c77dcb0e01de 1200
செய்திகள்உலகம்

வெளிநாட்டு மாணவர் கட்டணத்தில் 6% புதிய வரி:  பிரித்தானியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அதிருப்தி!

வெளிநாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணத்தின் மீது பிரித்தானிய அரசாங்கத்தால் விதிக்கப்படவுள்ள புதிய வரித் திட்டம் குறித்து,...