mahinda 1
இலங்கைசெய்திகள்

மஹிந்தவுடனான சந்திப்பு திருப்தி இல்லை! – பங்காளிக் கட்சியினர் கவலை

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இடம்பெற்ற சந்திப்பு திருப்தியளிக்கவில்லை என அரசாங்கத்தின் பங்காளி கட்சியினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஹெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேற்று மாலை பங்காளிக் கட்சியினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்ற நிலையில், சந்திப்பின்போது இறுதி இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.

ஹெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. தொழிற்சங்கங்களும் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை,  பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் நேற்று மாலை சந்தித்து பேச்சு நடத்தினர். சந்திப்பில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும் கலந்துகொண்டிருந்தார்.

இந்தச் சந்திப்பில் பிரதமர் நடுநிலை வகித்திருந்தார். எமது தரப்பு கருத்தை முன்வைத்தோம். ஜனாதிபதியையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளோம் என என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...