செய்திகள்அரசியல்இலங்கை

அரசின் பெரும்பான்மை சு.க கைகளிலேயே! – மைத்திரிபால சிறிசேன

Share
Maithripala Sirisena
Share

இந்த அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் என்பது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கைகளிலேயே தங்கியுள்ளது.” – என்று முன்னாள் ஜனாதிபதியும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார்.

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு பதிலடி கொடுத்து நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சூளுரைத்தார்.

” தேர்தல் காலங்களில் கூட்டணிகளை அமைத்துவிட்டு, அதன் பிறகு அரசுக்குள் மோதல் ஏற்பட்டு கூட்டணி முறிந்தால் என்ன நடக்கும் என்ற பாடத்தை வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த அரசிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருக்கலாம். அதில் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் 14 பேர் அங்கம் வகிக்கின்றனர். எனவே, எம்மால்தான் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் பாதுகாக்கப்படுகின்றது.

கூட்டணி ஒற்றுமையை காத்து, நட்புடன் நகரவே நாம் விரும்புகின்றோம். எம்மை தாக்க முற்பட்டால், அவர்களின் வழியில் அல்லாமல் வேறு வழியில் பதிலடி கொடுக்க நாமும் தயார்.” என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

#SriLankaNews

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...