ali subri
இலங்கைசெய்திகள்

லொஹான் விவகாரம்! – நீதிபதி நியமனம்

Share

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு கடந்த 12 ஆம் திகதி சென்ற லொஹான் ரத்வத்த அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவங்கள் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பவுள்ளன.

இவ்வாறு வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய நீதியமைச்சர் அலி சப்ரி,

அநுராபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றது எனக் கூறப்படும் சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கப்படத்தக்கவை. அவை நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயலாகும்.

மேற்படி சம்பவங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுக்க உயிர்நீதிமன்றில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார்.

இவை தொடர்பில் சி.ஐ.டியினர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் அதிகாரசபை ஆகியவை விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

சிறைக்கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது – என்று நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 10
செய்திகள்இந்தியா

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு: பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் – உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நிலைமை குறித்து ஆலோசனை!

புதுடெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி...

1762783393 Namal Rajapaksa SLFP Sri Lanka Ada Derana 6
செய்திகள்அரசியல்இலங்கை

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நாமல் ராஜபக்ஷ: 10 ஆண்டுகளுக்குப் பிறகு வருகை – அரசியல் கூட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான கட்சியின்...

25 6912189d45e01
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் ரெலோ ஊடக சந்திப்புப் புறக்கணிப்பு: சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம் – நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உடனடியாக வெளியேற்றம்!

ரெலோ (TELO) கட்சியின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கட்சியின் ஊடகச் சந்திப்பை...

image 3268f37140
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலைத் திட்ட எதிர்ப்புப் போராட்டம் 100ஆவது நாளை எட்டியது: வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம் தீப்பந்த எழுச்சிப் போராட்டமாக மாற்றம்!

மன்னார் தீவில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் வாழ்வுரிமைச் சாத்வீகப்...