செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கீழாக புரண்ட நிலையில் முல்லை கடற்பரப்பில் கரையொதுங்கிய மிகப் பெரும் கப்பல்!

Share
271545838 4180323178735924 7870899718196572596 n
Share

முல்லைத்தீவு – நாயாறு கடற்பரப்பில் தலைக்கீழாக புரண்ட நிலையில் பாரிய கப்பல் ஒன்று கரை ஒதுக்கியுள்ளது.

இன்று அதிகாலை தொழிலுக்காகச் சென்ற மீனவர்களால் குறித்த கப்பல் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களால் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற கடற்படையினர் கப்பலை பார்வையிட்டுள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 120 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்டதாக காணப்படும் குறித்த கப்பல் செம்மலை கிழக்கு நாயாறு கடற்கரையிலிருந்து 25 மீட்டர் தூரத்தில் கடலில் தலைகீழாக புரண்ட நிலையில் கரை ஒதுக்கியுள்ளது.

கரையொதுங்கியுள்ள கப்பலை பெருமளவான மக்களும் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த கப்பல் எங்கிருந்து வந்துள்ளது?, யாருடையது, எவ்வாறு விபத்துக்குள்ளாக்கியது உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

271568169 4180323218735920 7181821764908868037 n 271567637 4180323305402578 3897592995418393184 n

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...