சர்ச்சைக்குரிய போதகரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்
இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய போதகரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்

Share

சர்ச்சைக்குரிய போதகரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்

இலங்கை உட்பட 8 நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 வர்த்தகர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை வர்த்தக ஆலோசனை சேவை மற்றும் ஆசீர்வாத நிகழ்ச்சியை போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விரிவுரையானது இணையவழியில் நடத்தப்படுவதுடன் வர்த்தகர்கள் இலங்கையில் அமைந்துள்ள வங்கிக் கணக்கில் 210 அமெரிக்க டொலர்களை வைப்பிட்டு இந்த விரிவுரையில் இணைவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விரிவுரையின் மூலம் மட்டும் ஜெரோம் பெர்னாண்டோ 1.5 மில்லியன் ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது.

இதன் பின்னர், அவர் நாட்டை விட்டு வெளியேறி இந்த விரிவுரைகளை மேற்கொண்டு வருவதுடன், இலங்கையிலுள்ள வங்கிக் கணக்கில் பணம் வழைமையை போன்று வைப்பிடப்படுவதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

ஜெரோம் பெர்னாண்டோ சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இதுவரை தெரியவந்துள்ள போதிலும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்காவிலுள்ள மண்டபம் ஒன்றில் இந்த விரிவுரை நடைபெற்றது. இந்நிலையில் குறித்த மண்டபம் அடங்கிய காணியை சர்ச்சைக்குரிய ஜெரோமிற்கு வழங்கியதாக, அதன் உரிமையாளர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

முன்னாள் பொலிஸ் அதிகாரியான அவர், தேவாலயத்தை நிர்மாணிப்பதற்காக காணியை நன்கொடையாக வழங்கியதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் தெரிவித்துள்ளார்.

ஹோட்டல் அமைப்பதற்காக 9 கோடி ரூபாவுக்கு வாங்கிய இந்த காணி 2015ஆம் ஆண்டு ஜெரோம் பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

காணியின் உரிமையாளரான பொலிஸ் அதிகாரி ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கோடீஸ்வரராகும்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்கு அருகில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையை வெளிநாட்டவர் ஒருவருக்கு 19,000 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த பணத்தில் நிலம் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தொழிற்சாலை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்யப்பட்டாலும் கூட, தொழிற்சாலை அமைந்துள்ள காணி இந்த வர்த்தகருக்கு சொந்தமானது எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர் மாதாந்தம் 110 லட்சம் வாடகையாக பெறுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் இவர் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுள்ளார். அந்த பாடசாலைக்கு பல கோடி செலவில் நீச்சல் தடாகம் கூட கட்டியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
24 6718a970f1422
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு தாழங்குடாவில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதல்: சஹ்ரான் குழுவின் வெடிகுண்டு சோதனை நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பரபரப்பு!

மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் சஹ்ரான் குழுவினரால் வெடிகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தை அண்மித்த ஒரு...

Romance Scams in Canada 1024x560 1
செய்திகள்உலகம்

கனடா ஒன்றாரியோவில் மோசடிகள் அதிகரிப்பு: நோர்த் பேயில் ஒருவரிடம் $250,000 மோசடி – காவல்துறை எச்சரிக்கை!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த...

images 9
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலில் இரசாயனம் கலந்த நீர்த்தாரை தாக்குதல்: 3 இலங்கை பணியாளர்கள் பாதிப்பு – பாதுகாப்பிற்கு தூதரகம் கோரிக்கை!

இஸ்ரேலில் பணிபுரியும் வெளிநாட்டுப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட இரசாயனம் கலந்த நீர்த்தாரைப் பிரயோகத்தின் (Chemical Spray/Water...

images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...