செய்திகள்இலங்கை

சற்று முன்னர் பிரதமரை சந்தித்தார் இந்திய வெளியுறவு செயலாளர்!

Share
mahi scaled
Share

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இலங்கை பிரதமர் மகிந்த ராஜக்சவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த 2ம் திகதி இலங்கைக்கு வந்திருந்தார்.

இதன்போது, அவருடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் 3 பேரைக் கொண்ட அதிகாரிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்றதன் பின்னர், அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்பபம் இதுவாகும்.

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி உள்ளிட்ட பகுதிளுக்கு நேற்றைய தினம் சென்றிருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச தலைவர்களையும் அவர் சந்திக்க திட்டமிட்டிருந்தார். இதன்படி, பிரதமருடனான சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளாா்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...