சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவினர் எதிர்வரும் 24-31 வரை கொழும்பிற்கு வருகைதந்து இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர்.
இதன்போது பொருளாதார , நிதி சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பில் பேசப்படவுள்ளதுடன் கடனாளிகளிடமிருந்து போதிய உத்தரவாதத்தை எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கை முகங்கொடுக்கும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவிப் பொதியை அறிமுகப்படுத்துவதற்கான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் வசதிகளை வழங்குவதற்கு, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்குநரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதி ஊழியர்கள் கொழும்பிற்கு வருகையின் போது மற்ற பங்குதாரர்களுடன் பேச்சைத் தொடருவார்கள் இந்த அணியை பீட்டர் ப்ரூயர் மற்றும் மசாஹிரோ நோசாகி ஆகியோர் வழிநடத்துவார்கள்.
#SriLankaNews
Leave a comment