download 5 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கந்தக்காடு முகாமுக்கு விரைகிறது மனித உரிமை ஆணைக்குழு!

Share

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைக்குழுவொன்று, கந்தக்காடு புனர்வாழ்வு முகாமுக்கு இன்று (01) கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளது.

குறித்த முகாமில் ஏற்பட்ட நிலைவரம் தொடர்பில் அதிகாரிகளிடமும், கைதிகளிடமும் வாக்குமூலம் பெறுவதற்கும், உண்மையை கண்டறியும் நோக்கிலுமே குறித்த குழுவின் விஜயம் அமையுவுள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில், புனர்வாழ்வளிக்கப்பட்டுவரும் கைதிகளில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 600 இற்கும் மேற்பட்ட கைதிகள் கைதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையில் ஆரம்பமானது. தப்பிச்சென்றவர்களில் 653 பேர் சரணமடைந்துள்ளனர். எஞ்சிய 70 பேரை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் தொடர்கின்றது.

புனர்வாழ்வு மையத்தில் கொழும்பு, மோதரை பகுதியை சேர்ந்த இளைஞர், அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் என சக கைதிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தமது உரிமைகள் மீறப்படுவதாகவும், அடக்கி ஆளப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 12 1
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி அரசாங்கம் நகர்த்துகிறது” – ஊடக ஒடுக்குமுறை குறித்து சஜித் பிரேமதாச கடும் சாடல்!

தற்போதைய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நசுக்கி, கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை இடுவதன் மூலம் நாட்டை ஒரு...

25 694cd6294202f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்கரைப்பற்று – திருகோணமலை சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பயணிகள் காயம்!

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் 12 பேர்...

image 81ddc7db66
செய்திகள்உலகம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குண்டுவெடிப்பு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் பலி!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர்...

24 6639eb36d7d48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குளியாப்பிட்டியவில் 9 நாட்களாகக் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு: காணியில் புதைக்கப்பட்ட அதிர்ச்சிப் பின்னணி!

குளியாப்பிட்டிய, தும்மோதர பிரதேசத்தில் ஒன்பது நாட்களாகக் காணாமல் போயிருந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர், காணியொன்றில்...