download 5 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கந்தக்காடு முகாமுக்கு விரைகிறது மனித உரிமை ஆணைக்குழு!

Share

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைக்குழுவொன்று, கந்தக்காடு புனர்வாழ்வு முகாமுக்கு இன்று (01) கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளது.

குறித்த முகாமில் ஏற்பட்ட நிலைவரம் தொடர்பில் அதிகாரிகளிடமும், கைதிகளிடமும் வாக்குமூலம் பெறுவதற்கும், உண்மையை கண்டறியும் நோக்கிலுமே குறித்த குழுவின் விஜயம் அமையுவுள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில், புனர்வாழ்வளிக்கப்பட்டுவரும் கைதிகளில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 600 இற்கும் மேற்பட்ட கைதிகள் கைதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையில் ஆரம்பமானது. தப்பிச்சென்றவர்களில் 653 பேர் சரணமடைந்துள்ளனர். எஞ்சிய 70 பேரை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் தொடர்கின்றது.

புனர்வாழ்வு மையத்தில் கொழும்பு, மோதரை பகுதியை சேர்ந்த இளைஞர், அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் என சக கைதிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தமது உரிமைகள் மீறப்படுவதாகவும், அடக்கி ஆளப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...