IMG 20230523 WA0112
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பழுதடைந்த உணவு விற்ற உணவகத்திற்கு சுகாதார பரிசோதகரால் வழக்கு தாக்கல்!

Share

பழுதடைந்த உணவு விற்ற உணவகத்திற்கு சுகாதார பரிசோதகரால் வழக்கு தாக்கல்!

யாழ்நகர் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் சில தினங்களிற்கு முன்னர் பழுதடைந்த உணவினை வழங்கியதாக பொது மக்களால் யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பாலமுரளி அவர்களிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.
இதனையடுத்து நேற்றையதினம் 23.05.2023 அன்று வைத்தியர் பாலமுரளி தலைமையில் யாழ்நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் குறித்த கடை திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது தொழிலாளர் இருவர் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் இருந்தமை மற்றும் மனித பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி, றொட்டி, சோறு என 20kg உணவு பொருட்களும் பழுதடைந்த பழங்களும் பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றைய தினமே யாழ்நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் குறித்த உணவக உரிமையாளரிற்கு எதிராக சான்று பொருட்களுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கினை விசாரித்த மேலதிக நீதவான் சான்று பொருட்களை அழிக்குமாறு உத்தரவிட்டதுடன், கடை உரிமையாளரை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்ததுடன், வழக்கினை எதிர்வரும் யூன் மாதம் 15ம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
IMG 20230523 WA0111 IMG 20230523 WA0113 IMG 20230523 WA0114 IMG 20230523 WA0115
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...