செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு அரசே பொறுப்பு! – ஷர்ஷ டி சில்வா

Harsha de Silva
Share

” நாட்டின் தற்போதைய நிலைமைக்கு இந்த அரசே முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பொருளாதார நிபுணருமான கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நாட்டில் டொலர் தட்டுப்பாடு இல்லை என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கூறிவந்தார். அரசில் உள்ள மேலும் சிலரும் இந்த கருத்தையே வெளியிட்டனர். ஆனால் தற்போது டொலரை பெறுவதில் சிக்கல் என கூற ஆரம்பித்துள்ளனர். அரசுக்குள் இருப்பவர்கள் தங்களிடையே பந்துகளை பறிமாறிக்கொள்கின்றனர். மாறாக பிரச்சினைக்கு தீர்வை காண முற்படவில்லை. தற்போது நிலைமை மோசமடைந்துள்ளது. நாடு வங்குரோத்தடையும் கட்டத்துக்கு வந்துவிட்டது. இதற்கு தற்போதைய அரசு முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும்.” – என்றும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு நாம் அரசுக்கு ஆலோசனை வழங்கினோம். அந்த ஆலோசனையையும் கவனத்தில் எடுக்கப்படவில்லை.” எனவும் அவர் விசனம் வெளியிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...