செய்திகள்அரசியல்இலங்கை

தடுத்துவைக்கப்பட்டவர்கள் உயிரிழந்தால் அரசே முழுபொறுப்பு!

Share
1515638124 prison teen suspect suicide
Share

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் உயிரிழந்தால், அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இன்றைய (17) விவாதத்தில் கலந்துக்கொண்டு தொடர்ந்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், பனாமுரே பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த இந்திக்க ஜயரத்ன தொடர்பில்  பாதுகாப்பு  அமைச்சர் சரத் வீரசேகர கூறும் விடயங்களை முழுமையாக நம்ப முடியாதென குறிப்பிட்டுள்ளார்.

மதுஷாக இருக்கலாம், கொலைகாரராக இருக்கலாம் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். பொலிஸ் நிலையத்தில் வைத்து அவர்கள் உயிரிழந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் .

இது தொடர்பில் சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். நாட்டில் மீண்டுமொரு இந்திகவை உருவாக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளுக்கு நீண்ட நாட்களாக அடிமையான இந்திக்க, அவரது மனைவி பிள்ளைகளை தொடர்ந்து தாக்கி வருவதாக பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 11ஆம் திகதி அவரது மகள், தந்தையான இந்திக தன்னை தடியால் தாக்கியதாக கூறி முறைப்பாடு பதிவு செய்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

இந்த முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் அவரை தேடிவந்த நிலையில் நேற்றிரவு (16) 10.30 மணிக்கு சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எனினும், அதிகாலை 3.30 மணிக்கு சிறையில் உள்ள கம்பியில் தனது சேர்ட்டை பயன்படுத்தி தூக்கிட்டுள்ளார்.  அவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...