WhatsApp Image 2021 09 18 at 13.28.25 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அரசே முழுப்பொறுப்பு!

Share

நாடு தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால் மக்கள் பல இன்னல்களையும் கஷ்டங்களையும் எதிர்கொள்கின்றனர். இதற்கு இந்த அரசாங்கமே முழுப் பொறுப்பாகும்.

மோசமான நிலைக்கு நாடு சென்றுவிட்டது.அரசின் தவறுகளால் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி நாட்டு மக்கள் இறந்த வருகின்றனர்.

இவ்வாறு எதிர்க்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி அலவத்துவல தெரிவித்துள்ளார்.

எமது நாடு தெற்காசியாவில் மிக மோசமான இடத்துக்கு சென்று விட்டது. பங்களாதேஷ், இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் கொவிட் தொற்றிருந்து முன்னேறிவிட்டன. ஆனால் எமது நாட்டில் நாளுக்கு நாள் உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன.

இன்று நம் நாட்டில் டொலர்கள் இல்லை. அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் அது தொடர்பாக பல்வேறு அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.

எமது நாட்டில் சட்டம் ஒழுங்கு அமல்படுத்தப்படுவதில் இலங்கை தீவிரமாக முரண்படுவதாக மனித உரிமை ஆணையர் குற்றம் சாட்டியுள்ளார். தற்போதைய அரசாங்கம் ஒரே நாடு, ஒரே சட்டம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தது. இன்று என்ன நடந்ததுள்ளது? ஒரே சட்டம் அரசாங்க உறுப்பினர்களுக்கு அமுல்படுத்தப்படுவதில்லை.

ஜிஎஸ்பி பிளஸ் சலுகை இல்லாத போது, ​​நம் நாட்டில் ஏராளமான மக்கள் வேலை மற்றும் வருமானத்தை இழந்துள்ளனர்.

இன்று நம்மிடம் இருப்பது அதிகாரங்கள் தான். தன்னிச்சையான செயற்பாட்டில் தான் நம் நாட்டின் சட்டம் சரியாக அமுல்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

நாட்டில் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. பிழையான சோடிக்கப்பட்ட அறிக்கைகளை வெளியிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

நாட்டு மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க விரிவாக பணியாற்றுவது முக்கியம்.தடைகள் ஏற்படுவதற்கு முன் அவற்றைத் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

விவசாய சமூகத்துக்கு வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் முதலில் என்ன செய்துள்ளது?இன்று விவசாயிகளுக்கு தேவையான அளவு உரங்களை வழங்க அவர்களால் முடியவில்லை.

முழு தனியாரிடமும் நெல் வாங்குவதை அரசாங்கம் நிறுத்தாதுள்ளது .நெல்லுக்கு ஒரு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படாமலுள்ளது என்பது தெளிவாகிறது. – என மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
432e7679 1282 465e 9bbd 9fff0c004877
இலங்கைசெய்திகள்

மாலைத்தீவில் 355 கிலோ போதைப்பொருளுடன் கைதான 5 இலங்கையர்கள் 30 நாட்கள் தடுப்புக் காவலில்: நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்!

355 கிலோகிராம் ஐஸ் (Ice) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட...

th
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாகப் படகில் இந்தியா சென்ற இலங்கையர் கைது: மன்னார் குடும்பஸ்தர் தனுஷ்கோடியில் பிடிபட்டார்!

சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியைச் சென்றடைந்த குடும்பஸ்தர்...

9867DD57 36F5 4D0B B0C9 6373354B6CAA
செய்திகள்அரசியல்இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஆராயும் குழு: பரிந்துரை அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிப்பு!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act – PTA) இரத்து செய்வது தொடர்பான பரிந்துரைகள்...

Untitled design 2
செய்திகள்அரசியல்இலங்கை

பொய்க் குற்றச்சாட்டு வழக்கு: தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவைக் கைது செய்யப் பிடியாணை உத்தரவு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை (Thusitha Halloluwa) கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு...