WhatsApp Image 2021 09 18 at 13.28.25 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அரசே முழுப்பொறுப்பு!

Share

நாடு தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால் மக்கள் பல இன்னல்களையும் கஷ்டங்களையும் எதிர்கொள்கின்றனர். இதற்கு இந்த அரசாங்கமே முழுப் பொறுப்பாகும்.

மோசமான நிலைக்கு நாடு சென்றுவிட்டது.அரசின் தவறுகளால் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி நாட்டு மக்கள் இறந்த வருகின்றனர்.

இவ்வாறு எதிர்க்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி அலவத்துவல தெரிவித்துள்ளார்.

எமது நாடு தெற்காசியாவில் மிக மோசமான இடத்துக்கு சென்று விட்டது. பங்களாதேஷ், இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் கொவிட் தொற்றிருந்து முன்னேறிவிட்டன. ஆனால் எமது நாட்டில் நாளுக்கு நாள் உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன.

இன்று நம் நாட்டில் டொலர்கள் இல்லை. அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் அது தொடர்பாக பல்வேறு அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.

எமது நாட்டில் சட்டம் ஒழுங்கு அமல்படுத்தப்படுவதில் இலங்கை தீவிரமாக முரண்படுவதாக மனித உரிமை ஆணையர் குற்றம் சாட்டியுள்ளார். தற்போதைய அரசாங்கம் ஒரே நாடு, ஒரே சட்டம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தது. இன்று என்ன நடந்ததுள்ளது? ஒரே சட்டம் அரசாங்க உறுப்பினர்களுக்கு அமுல்படுத்தப்படுவதில்லை.

ஜிஎஸ்பி பிளஸ் சலுகை இல்லாத போது, ​​நம் நாட்டில் ஏராளமான மக்கள் வேலை மற்றும் வருமானத்தை இழந்துள்ளனர்.

இன்று நம்மிடம் இருப்பது அதிகாரங்கள் தான். தன்னிச்சையான செயற்பாட்டில் தான் நம் நாட்டின் சட்டம் சரியாக அமுல்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

நாட்டில் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. பிழையான சோடிக்கப்பட்ட அறிக்கைகளை வெளியிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

நாட்டு மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க விரிவாக பணியாற்றுவது முக்கியம்.தடைகள் ஏற்படுவதற்கு முன் அவற்றைத் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

விவசாய சமூகத்துக்கு வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் முதலில் என்ன செய்துள்ளது?இன்று விவசாயிகளுக்கு தேவையான அளவு உரங்களை வழங்க அவர்களால் முடியவில்லை.

முழு தனியாரிடமும் நெல் வாங்குவதை அரசாங்கம் நிறுத்தாதுள்ளது .நெல்லுக்கு ஒரு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படாமலுள்ளது என்பது தெளிவாகிறது. – என மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...