WhatsApp Image 2021 09 18 at 13.28.25 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அரசே முழுப்பொறுப்பு!

Share

நாடு தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால் மக்கள் பல இன்னல்களையும் கஷ்டங்களையும் எதிர்கொள்கின்றனர். இதற்கு இந்த அரசாங்கமே முழுப் பொறுப்பாகும்.

மோசமான நிலைக்கு நாடு சென்றுவிட்டது.அரசின் தவறுகளால் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி நாட்டு மக்கள் இறந்த வருகின்றனர்.

இவ்வாறு எதிர்க்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி அலவத்துவல தெரிவித்துள்ளார்.

எமது நாடு தெற்காசியாவில் மிக மோசமான இடத்துக்கு சென்று விட்டது. பங்களாதேஷ், இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் கொவிட் தொற்றிருந்து முன்னேறிவிட்டன. ஆனால் எமது நாட்டில் நாளுக்கு நாள் உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன.

இன்று நம் நாட்டில் டொலர்கள் இல்லை. அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் அது தொடர்பாக பல்வேறு அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.

எமது நாட்டில் சட்டம் ஒழுங்கு அமல்படுத்தப்படுவதில் இலங்கை தீவிரமாக முரண்படுவதாக மனித உரிமை ஆணையர் குற்றம் சாட்டியுள்ளார். தற்போதைய அரசாங்கம் ஒரே நாடு, ஒரே சட்டம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தது. இன்று என்ன நடந்ததுள்ளது? ஒரே சட்டம் அரசாங்க உறுப்பினர்களுக்கு அமுல்படுத்தப்படுவதில்லை.

ஜிஎஸ்பி பிளஸ் சலுகை இல்லாத போது, ​​நம் நாட்டில் ஏராளமான மக்கள் வேலை மற்றும் வருமானத்தை இழந்துள்ளனர்.

இன்று நம்மிடம் இருப்பது அதிகாரங்கள் தான். தன்னிச்சையான செயற்பாட்டில் தான் நம் நாட்டின் சட்டம் சரியாக அமுல்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

நாட்டில் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. பிழையான சோடிக்கப்பட்ட அறிக்கைகளை வெளியிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

நாட்டு மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க விரிவாக பணியாற்றுவது முக்கியம்.தடைகள் ஏற்படுவதற்கு முன் அவற்றைத் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

விவசாய சமூகத்துக்கு வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் முதலில் என்ன செய்துள்ளது?இன்று விவசாயிகளுக்கு தேவையான அளவு உரங்களை வழங்க அவர்களால் முடியவில்லை.

முழு தனியாரிடமும் நெல் வாங்குவதை அரசாங்கம் நிறுத்தாதுள்ளது .நெல்லுக்கு ஒரு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படாமலுள்ளது என்பது தெளிவாகிறது. – என மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...