tamilni 9 scaled
இலங்கைசெய்திகள்

இந்தியாவுடன் இணங்க தயார்! டக்ளஸ் அறிவிப்பு

Share

இந்தியாவுடன் இணங்க தயார்! டக்ளஸ் அறிவிப்பு

இலங்கை மற்றும் இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் இணக்கப்பாட்டுடன் பேச்சுக்கள் நடத்தத் தயாராக உள்ளதாக தமிழ்நாட்டு மீன்வளத்துறை அமைச்சருக்கு இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று(28) வருகை தந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்ட கடற்றொழிலாளர்கள் நன்னீர் மீன்பிடியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில் இலங்கை மற்றும் இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பிலான இரு நாட்டு அரசுகளதும் பேச்சுக்கள் முன்னேற்றம் ஏதும் இருக்கிறதா என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நேற்று முன்தினம்(27) தமிழ்நாட்டு மீன்வளத் துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் தொலைபேசியில் பேசியிருந்தார்.

இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்றார் அத்தோடு செவ்வாய் மாலை தாங்கள் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் கலந்துரையாடுவதாகவும் அவர் ஊடாக பாண்டிச்சேரி முதலமைச்சருடன் கலந்துரையாடுவதாகவும் எனக்கு கூறப்பட்டது.

அதேநேரத்தில், என்னையும் அந்தக் கலந்துரையாடலுக்கு நேரில் அல்லது தொலைபேசியில் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்கப்பட்டதற்கு நான் அதற்கு இணங்கியுள்ளேன்.

எனக்கு அவர்கள் உத்தரவாதம் தரவேண்டும் அத்தோடு அவர்களின் இழுவை மடிப்படகுகள் எங்கள் கடலுக்குள் வந்து வளங்களை சுரண்டுகின்ற மற்றும் அழிக்கின்ற எங்கள் கடற்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்ற உத்தரவாதத்தினை தருவார்களாக இருந்தால் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு தயாராக இருக்கின்றேன் இதுதான் பேச்சுக்கான அடிப்படை” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....