“நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குக் கடந்த நல்லாட்சி அரசே காரணம்.”
– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டினார்.
பத்தரமுல்லைப் பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“நாட்டில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்” என்றும் அவர் உறுதியளித்தார்.
#SriLankaNews
Leave a comment