SriLanka2
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி மாளிகையில் கைப்பற்றப்பட்ட பணத்தை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

Share

ஜூன் 9 போராட்டத்தின் பின்னர் ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களால் அங்கு கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பணத்தை உடனடியாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டெடுக்கப்பட்ட குறித்த பணம், பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது., குறித்த பணத்தை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதவான் கோட்டை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு உத்தரவிட்டார்.

கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு கோடியே எழுபத்தி எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணத்தை கோட்டை பொலிஸாரிடம் கையளித்ததாக கோட்டை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.

பணம் கையளிக்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துள்ள போதிலும் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய நீதவான், பணத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...

25
இலங்கைபிராந்தியம்

எல்பிட்டி தனியார் பாடசாலை மாணவர்கள் 16 பேருக்கு திடீர் ஒவ்வாமை: வைத்தியசாலையில் அனுமதி – பொலிஸ் விசாரணை!

காலி மாவட்டம், எல்பிட்டி பகுதியிலுள்ள தனியார் பாடசாலையொன்றைச் சேர்ந்த 16 மாணவர்கள் திடீர் ஒவ்வாமை (Allergy)...