SriLanka2
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி மாளிகையில் கைப்பற்றப்பட்ட பணத்தை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

Share

ஜூன் 9 போராட்டத்தின் பின்னர் ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களால் அங்கு கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பணத்தை உடனடியாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டெடுக்கப்பட்ட குறித்த பணம், பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது., குறித்த பணத்தை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதவான் கோட்டை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு உத்தரவிட்டார்.

கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு கோடியே எழுபத்தி எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணத்தை கோட்டை பொலிஸாரிடம் கையளித்ததாக கோட்டை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.

பணம் கையளிக்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துள்ள போதிலும் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய நீதவான், பணத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...