01 COVID
இலங்கைசெய்திகள்

நவம்பரில் நாடு வழமைக்கு திரும்பும் –சன்ன ஜெயசுமன

Share

நாட்டில் தற்போது பதிவாகும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு வீதம் குறைவடைந்து வருகின்றது. அதன்படி நவம்பர் இரண்டாவது வாரத்தில் நாடு படிப்படியாக வழமைக்கு திரும்பும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 50 வீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது ஒரு மகத்தான சாதனை.

அதேவேளை தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இதனால் நவம்பர் மாதத்தின் 2ஆவது வாரத்தில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பமுடியும்.

ஆயினும் மக்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தற்போதைய கொரோனா பரவல் குறைவடையும் சூழலை தொடர்ந்து பராமரித்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...