நாட்டில் தற்போது பதிவாகும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு வீதம் குறைவடைந்து வருகின்றது. அதன்படி நவம்பர் இரண்டாவது வாரத்தில் நாடு படிப்படியாக வழமைக்கு திரும்பும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 50 வீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது ஒரு மகத்தான சாதனை.
அதேவேளை தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
இதனால் நவம்பர் மாதத்தின் 2ஆவது வாரத்தில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பமுடியும்.
ஆயினும் மக்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தற்போதைய கொரோனா பரவல் குறைவடையும் சூழலை தொடர்ந்து பராமரித்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment