lakshman kiriella
அரசியல்இலங்கைசெய்திகள்

மக்கள் ஆணையை பெற்ற அரசே நாட்டுக்கு தேவை!

Share

” மக்கள் ஆணையை பெற்ற புதிய அரசே நாட்டுக்கு தேவை. அதனை நோக்கி பயணிப்பதற்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அவசரகால சட்டம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, எதிரணி பிரதம கொறடாவான லஷ்மன் கிரியல்ல எம்.பி. இவ்வாறு வலியுறுத்தினார்.

” குதிரை ஓடிய பிறகு கடிவாளம் பூட்டுவதுபோலவே, சர்வக்கட்சி அரசுக்கான கோரிக்கையை அரசு விடுத்துள்ளது. தற்போது காலம் கடந்துவிட்டது. முன்கூட்டியே செய்திருக்க வேண்டியதொன்றை, காலம் கடந்த பின்னர் செயற்வதற்கு முற்படுகின்றனர்.” – எனவும் கிரியல்ல சுட்டிக்காட்டினார்.

” சர்வதேச சட்டத்திட்டங்களுக்கமைய செயற்பட வேண்டும் என ஆலோசனை வழங்கும் ஜனாதிபதி, தற்போது அதற்கு மாறாக செயற்படுகின்றார்.” – எனவும் அவர் கவலை வெளியிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...