New legume flour improves blood glucose response to white bread wrbm large
இலங்கைசெய்திகள்

பாணின் விலை 300 ஐ தாண்டும்!!

Share

ஒரு இறாத்தல் பாணின் விலை 300 ரூபாயாக அதிகரிக்கும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலர் தட்டுப்பாடு காரணமாக கோதுமை மா இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு கோதுமை மா நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கையால் 2,000 க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் பேக்கரிகளை மூட வேண்டி ஏற்படும் என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 ரூபாக்கு மேல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கோதுமை மா தட்டுப்பாடு தீர்க்கப்பட்டு, விலை குறைக்கப்படாவிடின், பாண் உட்பட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மொத்த விற்பனை நிலையங்களில் 50 கிலோகிராம் கோதுமை மா 17,000 ரூபாக்கும் ஏனைய இடங்களில் 20,000 ரூபாக்கும் விற்பனை செய்யப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...