New legume flour improves blood glucose response to white bread wrbm large
இலங்கைசெய்திகள்

பாணின் விலை 300 ஐ தாண்டும்!!

Share

ஒரு இறாத்தல் பாணின் விலை 300 ரூபாயாக அதிகரிக்கும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலர் தட்டுப்பாடு காரணமாக கோதுமை மா இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு கோதுமை மா நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கையால் 2,000 க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் பேக்கரிகளை மூட வேண்டி ஏற்படும் என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 ரூபாக்கு மேல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கோதுமை மா தட்டுப்பாடு தீர்க்கப்பட்டு, விலை குறைக்கப்படாவிடின், பாண் உட்பட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மொத்த விற்பனை நிலையங்களில் 50 கிலோகிராம் கோதுமை மா 17,000 ரூபாக்கும் ஏனைய இடங்களில் 20,000 ரூபாக்கும் விற்பனை செய்யப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...