New legume flour improves blood glucose response to white bread wrbm large
இலங்கைசெய்திகள்

பாணின் விலை 300 ஐ தாண்டும்!!

Share

ஒரு இறாத்தல் பாணின் விலை 300 ரூபாயாக அதிகரிக்கும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலர் தட்டுப்பாடு காரணமாக கோதுமை மா இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு கோதுமை மா நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கையால் 2,000 க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் பேக்கரிகளை மூட வேண்டி ஏற்படும் என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 ரூபாக்கு மேல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கோதுமை மா தட்டுப்பாடு தீர்க்கப்பட்டு, விலை குறைக்கப்படாவிடின், பாண் உட்பட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மொத்த விற்பனை நிலையங்களில் 50 கிலோகிராம் கோதுமை மா 17,000 ரூபாக்கும் ஏனைய இடங்களில் 20,000 ரூபாக்கும் விற்பனை செய்யப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...