கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை மத்திய வங்கி விடுவித்துள்ளது.
இரண்டு அரச வங்கிகளுக்கு இவ்வாறு அமெரிக்க டொலர்கள் விடுவித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தேவை ஏற்படுமாக இருந்தால் மேலும் நிதியினை வழங்கத் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாட்டில் ஏற்பட்ட டொலர் தட்டுப்பாடு காரணமாகக் கொழும்பு துறைமுகத்தில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்கள் தேங்கியுள்ளது.
இந்நிலையில், தற்போது 400 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Leave a comment