14 வயது காதலியை வல்லுறவுக்குள்ளாக்கிய காதலன்!

download 24 1 2

14 வயது காதலியை வல்லுறவுக்குள்ளாக்கிய காதலன்!

யாழ்ப்பாணம், கெருடாவில் பகுதியில் 14 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய 21 வயதான காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் 21 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டார்.

கெருடாவில் பகுதியை சேர்ந்த 14 வயதான சிறுமியுடன் காதல் வசப்பட்ட 21 வயதான இளைஞன், பல சமயங்களில் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளார்.

இளைஞன் கைது செய்யப்பட்டதுடன், சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுமி வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது.

இதையடுத்து இளைஞன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

#srilankaNews

 

Exit mobile version