காலி முகத்திடலில் இனந்தெரியாதவர் சடலம்!

தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் சாவு!

தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் சாவு!

காலி முகத்திடலில் உள்ள கொடிக்கம்பத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் சில காலமாக சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 27 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் நேற்று (28) காலை வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version