மன்னாரில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: பிரேத பரிசோதனையில் தகவல்

tamilnaadi 103

மன்னாரில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: பிரேத பரிசோதனையில் தகவல்

மன்னார் – தலைமன்னாரில் 10 வயது சிறுமி தகாத நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமியொருவர் நேற்றைய தினம் (16.02.2024) சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் (17.02.2024) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள தென்னந்தோப்பில் வேலை செய்த 52 வயதான திருகோணமலை – குச்சவெளியை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version