7 40
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் : பிரித்தானியா விடுத்த எச்சரிக்கை

Share

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் : பிரித்தானியா விடுத்த எச்சரிக்கை

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்சத்தை நிராகரிக்க முடியாது என ஐக்கிய இராச்சியம் (United Kingdom) எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் இடங்களான ஹோட்டல்கள், மதுபான சாலைகள், உணவகங்கள் மற்றும் இரவு விடுதிகள், கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பெரிய பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக தாக்குதல்கள் நடத்தப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் பிரித்தானிய பிரஜைகள் நெரிசலான பொது இடங்களை தவிர்த்தல், தங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி எப்போதும் விழிப்புடன் இருத்தல், உள்ளூர் ஊடக அறிக்கைகளுடன் புதுப்பித்த நிலையில் இருத்தல் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த பயண ஆலோசனையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,“இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசங்களில் நிலவும் மோதல்கள் உலகம் முழுவதும் அதிக பதற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது.

அல்கொய்தா மற்றும் டேஷ் போன்ற பயங்கரவாத குழுக்கள் மோதலுக்கு பதிலளிக்கும் வகையில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த தங்கள் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த மோதல் தனிநபர்களை தாக்குதல் நடத்த தூண்டும்.

தாக்குதல்கள் கண்மூடித்தனமாகவும் எச்சரிக்கை இல்லாமல் நிகழலாம் என்பதுடன் பயங்கரவாத தாக்குதல்கள் யூத அல்லது முஸ்லிம் சமூகங்களையோ அல்லது இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலன்களையோ குறிவைக்கலாம்.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் ஞாயிறு அன்று, இலங்கையில் 03 தேவாலயங்கள் மற்றும் 03 ஹோட்டல்களுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களில் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் 08 பிரித்தானிய பிரஜைகள் உட்பட 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்” என இங்கிலாந்து வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...