20220807 100633 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பத்தாவது தேசிய மாநாடு

Share

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பத்தாவது தேசிய மாநாடு இன்றைய தினம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியிலுள்ள ராஜா ஹம்சிகா மண்டபத்தின் சதானந்தம் அரங்கில் இடம்பெற்றது.

இதன்போது மங்கள விளக்கேற்றப்பட்டு புளொட்டின் செயலதிபர் உமாமகேஸ்வரனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

புளொட்டின் சர்வதேச கிளைகளின் ஆலோசகர் கிருஸ்ணன் மற்றும் மாநாட்டிற்காக தமிழகத்தில் இருந்து வருகைதந்த தி.முக. அகில இந்திய தொழிற்சங்க தலைவர் கரூர் கண்ணதாசன் ஆகியோர் புளொட் தலைவர் சித்தார்த்தனால் பொன்னாடை போர்த்து கௌரவிக்கப்பட்டனர்.

கட்சியின் செயலாளர் நா.இரட்ணலிங்கம் பொதுச்சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை தேசிய மாநாட்டில் கட்சியின் பிரகடனமாக அறிவித்தார்.

இந்த மாநாட்டில் இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா,தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் செயலாளர் சிறீதரன் , மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன், வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

மேலும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், க.சிவநேசன், ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோரும் புளொட்டின் உள்நாட்டு வெளிநாட்டு முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியினுடைய அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டர்.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் மாநாட்டிற்கு வருகை தராத போதும் அவருடைய வாழ்த்துரை மாநாட்டின்போது வாசிக்கப்பட்டது.

20220807 09544020220807 100949 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 2
இந்தியாசெய்திகள்

கரூர் துயரம் – ஆட்டம் காணும் த.வெ.க..! சி.பி.ஐ விசாரணையை கோரிய மோடி தரப்பு

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

19 2
இலங்கைசெய்திகள்

யாழில் கைதான பெண் சட்டத்தரணி – வடக்கில் வெடித்த போராட்டம்

உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது காவல்துறையினரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து...

18 3
இலங்கைசெய்திகள்

சிறிலங்காவின் போர்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்த ஐ.நா

இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் திட்டத்தை...

17 3
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பாதுகாப்பு! நிலைப்பாட்டை அறிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எவ்வித குறைப்பும் செய்யப்பட்டவில்லை. அவர்கள் கோரும் பாதுகாப்பு வழங்கப்படும்...