20220807 100633 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பத்தாவது தேசிய மாநாடு

Share

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பத்தாவது தேசிய மாநாடு இன்றைய தினம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியிலுள்ள ராஜா ஹம்சிகா மண்டபத்தின் சதானந்தம் அரங்கில் இடம்பெற்றது.

இதன்போது மங்கள விளக்கேற்றப்பட்டு புளொட்டின் செயலதிபர் உமாமகேஸ்வரனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

புளொட்டின் சர்வதேச கிளைகளின் ஆலோசகர் கிருஸ்ணன் மற்றும் மாநாட்டிற்காக தமிழகத்தில் இருந்து வருகைதந்த தி.முக. அகில இந்திய தொழிற்சங்க தலைவர் கரூர் கண்ணதாசன் ஆகியோர் புளொட் தலைவர் சித்தார்த்தனால் பொன்னாடை போர்த்து கௌரவிக்கப்பட்டனர்.

கட்சியின் செயலாளர் நா.இரட்ணலிங்கம் பொதுச்சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை தேசிய மாநாட்டில் கட்சியின் பிரகடனமாக அறிவித்தார்.

இந்த மாநாட்டில் இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா,தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் செயலாளர் சிறீதரன் , மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன், வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

மேலும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், க.சிவநேசன், ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோரும் புளொட்டின் உள்நாட்டு வெளிநாட்டு முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியினுடைய அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டர்.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் மாநாட்டிற்கு வருகை தராத போதும் அவருடைய வாழ்த்துரை மாநாட்டின்போது வாசிக்கப்பட்டது.

20220807 09544020220807 100949 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...