3 5
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவில் கடும் குழப்ப நிலை

Share

கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலைத் தொடர்ந்து, புதியதாக தெரிவுசெய்யப்பட்ட கொழும்பு மாநகர சபை இன்று (ஜூன் 16) காலை நகர மண்டபத்தில் தனது தொடக்க கூட்டத்தைக் கூட்டியது.

முதல் அமர்வின் முதன்மையான நடவடிக்கையாக, மேயரும் துணை மேயரும் தெரிவுசெய்வது திட்டமிடப்பட்டிருந்தது.

இத்தேர்தலில் எந்தக் கட்சியும் தெளிவான பெரும்பான்மையைப் பெறாத நிலையில், தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆகிய இரு முக்கியக் கட்சிகளும் கடந்த நாட்களில் தங்கள் வேட்பாளரை வெற்றியடையச் செய்ய வேறு குழுக்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாக கூறி வந்தன.

கூட்டத்தின் போது, NPP கட்சி சார்பில் வ்ரை கலி பால்தசார் மேயராகவும், SJB சார்பில் ரிசா சாரூக் மேயராகவும் பெயரிடப்பட்டனர்.

மேயர் தெரிவு குறித்த வாக்கெடுப்பு முறை குறித்து முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சில உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பை வலியுறுத்தினர், மற்றவர்கள் மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சரங்கிகா ஜயசுந்தரவை திறந்த வாக்கெடுப்பை நடத்துமாறு கேட்டனர்.

இதனால் கூட்டத்தில் குழப்பமான நிலை ஏற்பட்டது. மேயர் தேர்வுக்கான முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

மேயர் தெரிவிற்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் மேயர் பதவிக்காக போட்டியிடுகின்றனர்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...