1 6
இலங்கைசெய்திகள்

லண்டனில் இருந்து சென்னை சென்ற மற்றுமொரு விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு – பயணிகள் பாதிப்பு

Share

360 பயணிகளுடன் லண்டனில் இருந்து சென்னை புறப்பட்ட விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்திற்கு சொந்தமான விமானமே இவ்வாறு நேற்றிரவு (15.06.2025) தரையிறக்கப்பட்டுள்ளது.

நடுவானில் பறந்த போது இயந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவசரமாக மீண்டும் லண்டனில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை மற்றும் லண்டனில், 700க்கும் மேற்பட்ட பயணிகள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

அண்மையில் இந்தியாவின் அகமதாபாத் விமான விபத்தின் பின்னர் விமான பயணங்களில் ஈடுபடுவோர் அச்ச நிலையில் உள்ளனர்.

இவ்வாறான நிலையில் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...