image 379dde8029
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்ணீர்ப்புகை தாக்குதல் – பாதுகாப்பு உத்தியோகத்தர் பலி

Share

கொழும்பு பல்கலைகழகத்துக்கு அருகில் கடந்த செவ்வாய்க்கிழமை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியின் போது பொலிஸார் நடத்திய கண்ணீர்ப்புகை தாக்குதல் சம்பவத்தில் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதாச சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,அரசாங்கம் அரச வன்முறை மற்றும் மிலேசத்தனத்தை பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்கின்றது. கொழும்பு மற்றும் களனி பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதன்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த நொச்சியாகமவை சேர்ந்த பிரியந்த வன்னிநாயக்க மரணித்துள்ளார்.

அதேபோன்று இதற்கு முன்னர் ஜே.வி.பியின் நிவித்திகலவை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்திருந்தார்.

இதேவேளை ரோயல் கல்லூரியின் பழைய மாணவராக ஜனாதிபதி இருக்கின்றார். அவரின் பாடசாலை மாணவர்களுக்கும் கண்ணீர்புகை தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...