image 1e9619ba1a
இலங்கைசெய்திகள்

மாற்று உடையில் ஆசிரியைகள்!!

Share

நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலை ஆசிரியைகள் சிலர், இன்றையதினம் பாடசாலைக்கு சாரியை அணிந்துவராமல், கவுன், நீள காற்சட்டை, குர்தா ஆகிய அடைகளை அணிந்து வந்திருந்தனர்.

நாட்டின் தற்போதைய ​பொருளாதார நெருக்கடி நிலைமையினால்,சாரிகளின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக, சாரிக்கு பதிலாக ஏனைய ஆடைகளை அணியவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என ஆசிரியைகள் சிலர், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக, சாரியை அணிவதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. ஆகையால், அரச ஊழியர்கள் பொருத்தமான ஆடைகளை அணிந்து கடமைக்கு சமூகமளிக்கலாம் என பொதுநிர்வாக அமைச்சு சுற்றறிக்கையை விடுத்துள்ளது.

ஏனைய அரச ஊழியர்களைப் போல, சாரி அல்லாமல், பொருத்தமான ஆடைகளில் அணிந்துவந்து கடமையாற்றுவதற்கு ஆசிரியைகளுக்கு அனுமதியளிக்குமாறு, இலங்கை ஆசிரியர் சங்கம், கல்வியமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

அந்த கோரிக்கையை கல்வியமைச்சு நிராகரித்து இருந்தது. இந்த நிலை​யிலேயே, ஆசிரியைகள் சிலர், ஏனைய ஆடைகளை அணிந்துகொண்டு பாடசாலைகளுக்கு சென்றுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...