4SpFPz8TjWpL63l6dINw 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் ஆசிரியரால் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!

Share

யாழ்ப்பாணம், வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பெண்கள் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர் மாணவிகள் சிலரை பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் அதிபரிடம் முறையிட்ட மாணவி பாடசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல் நிலையத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயர்தர வகுப்பில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பெற்றோரும் அதிபரிடம் இந்த விடயம் சம்பந்தமாக முறையிட்டுள்ளனர். இதனையடுத்து மாணவியை வேறு பாடசாலைக்கு மாற்றுவதென்றால் மாற்றுங்கள் என்று பெற்றோரிடம் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து தரம் ஒன்றிலிருந்து குறித்த பாடசாலையில் கற்ற மாணவி, அதே வலயத்திலுள்ள வேறு பாடசாலையில் இணைந்துள்ளார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
04 6
செய்திகள்உலகம்

லியோனல் மெஸ்ஸி மீதான சமூக ஊடக விமர்சனம்: டொனால்ட் ட்ரம்ப்புடனான சந்திப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது!

புகழ்பெற்ற அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, தற்போது சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்....

03 7
உலகம்செய்திகள்

ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டன!

சவூதி அரேபியாவின் ஷைபா (Shaybah) எண்ணெய் வயலை இலக்கு வைத்து ஏவப்பட்ட 6 ஆளில்லா வானூர்திகள்...

02 6
செய்திகள்உலகம்

ஈராக் எண்ணெய் களஞ்சியத்தின் மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல்: மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்!

தெற்கு ஈராக்கில் அமைந்துள்ள எண்ணெய் களஞ்சியமொன்றின் மீது ஆளில்லா வானூர்தி (Drone) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத்...

28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...