யாழில் பாடசாலை மாணவிக்கு ஆசிரியரால் நேர்ந்த கொடூரம்!
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் பாடசாலை மாணவிக்கு ஆசிரியரால் நேர்ந்த கொடூரம்!

Share

யாழில் பாடசாலை மாணவிக்கு ஆசிரியரால் நேர்ந்த கொடூரம்!

யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயது மாணவியிடம் ஆசிரியர் ஒருவரால் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் கடந்த ஜூலை 31ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் அந்த மாணவியால் பாடசாலை நிர்வாகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், இதனை அந்த பாடசாலையின் நிர்வாகத்தினர் வெளியே தெரியாமல் மூடி மறைப்பதற்கு முயற்சித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊர்காவற்துறை மற்றும் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி அமைப்பாளர் சதாசிவத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது.

அதனடிப்படையில் சதாசிவம் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைவாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து நேற்று முன்தினம் (04-08-2023) அந்த ஆசிரியரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்து, நேற்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்திய போது குறித்த ஆசிரியருக்கு பிணையில் செல்வதற்கு நீதிவான் அனுமதி அளித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...