Education 2
இலங்கைசெய்திகள்

ஆசிரியர் ஆட்சேர்ப்பு – போட்டிப் பரீட்சை விரைவில்

Share

நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.

40 வயதுக்குட்பட்ட அனைத்து அரச ஊழியர்களும் விண்ணப்பங்களை நேரடியாக அனுப்பலாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது உயர்தர வகுப்புகளுக்கான அதிக எண்ணிக்கையிலான வெற்றிடங்கள் காணப்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆட்சேர்ப்புக்கு மேலதிகமாக, எஞ்சியுள்ள மற்றும் உருவாகும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஏனைய பட்டதாரிகளையும் இணைத்துக்கொள்ள மாகாண சபைகள் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...