download 8 1 16
இலங்கைசெய்திகள்

மே 15ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியர் நியமனங்கள்!

Share

மே 15ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியர் நியமனங்கள்!

தேசிய கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் கற்கைநெறியை நிறைவு செய்த டிப்ளோமா தாரிகளுக்கு மே 15ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற ஒன்றுகூடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், கல்வியல் கல்லூரியில் டிப்ளமோ பாடநெறியை பூர்த்தி செய்த 8000 பேரை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அண்மையில் கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.

இதனடிப்படையில், நாடளாவிய ரீதியில் வெற்றிடம் காணப்படும் பாடசாலைகளில் குறித்த ஆசிரியர்கள் கடமையாற்றவுள்ளதாகவும் விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்காக பல்வேறு பாடசாலைகளிலும் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் கல்வி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...