tamilnaadi 57 scaled
இலங்கைசெய்திகள்

ஒவ்வொரு பிரஜைக்கும் தனியான வரி கோப்புக்களை பேணுவது சாத்தியமில்லை

Share

ஒவ்வொரு பிரஜைக்கும் தனியான வரி கோப்புக்களை பேணுவது சாத்தியமில்லை

ஒவ்வொரு பிரஜைக்கும் தனியான வரி கோப்புக்களை பேணுவது நடைமுறைச் சாத்தியமற்றது என தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வரி கோப்புக்களை ஒவ்வொருக்காகவும் உருவாக்குவதற்கு நீண்ட நேரமும், கூடுதல் ஆளணி வளமும் தேவைப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்ட வரி கோப்பு ஒன்றை பரிசீலனை செய்வதற்கு குறைந்தபட்சம் அரை மணித்தியாலம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த பொறுப்பு ஒன்பது உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்படி நாள் ஒன்றுக்கு 144 கோப்புக்களையே பரிசீலனை செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மில்லியன் கணக்கான கோப்புக்களை பரிசீலனை செய்வது மிகவும் சவால் மிக்க விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு பிரஜைக்கும் வரி கோப்புக்களை திறப்பதனை விடவும் வரி செலுத்தாதவர்களிடமிருந்து வரிகளை அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் வரி செலுத்த தவறியவர்களிடம் அறவீடு செய்வதில் அசமந்த போக்கினை பின்பற்றி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....