tamilnaadi 57 scaled
இலங்கைசெய்திகள்

ஒவ்வொரு பிரஜைக்கும் தனியான வரி கோப்புக்களை பேணுவது சாத்தியமில்லை

Share

ஒவ்வொரு பிரஜைக்கும் தனியான வரி கோப்புக்களை பேணுவது சாத்தியமில்லை

ஒவ்வொரு பிரஜைக்கும் தனியான வரி கோப்புக்களை பேணுவது நடைமுறைச் சாத்தியமற்றது என தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வரி கோப்புக்களை ஒவ்வொருக்காகவும் உருவாக்குவதற்கு நீண்ட நேரமும், கூடுதல் ஆளணி வளமும் தேவைப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்ட வரி கோப்பு ஒன்றை பரிசீலனை செய்வதற்கு குறைந்தபட்சம் அரை மணித்தியாலம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த பொறுப்பு ஒன்பது உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்படி நாள் ஒன்றுக்கு 144 கோப்புக்களையே பரிசீலனை செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மில்லியன் கணக்கான கோப்புக்களை பரிசீலனை செய்வது மிகவும் சவால் மிக்க விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு பிரஜைக்கும் வரி கோப்புக்களை திறப்பதனை விடவும் வரி செலுத்தாதவர்களிடமிருந்து வரிகளை அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் வரி செலுத்த தவறியவர்களிடம் அறவீடு செய்வதில் அசமந்த போக்கினை பின்பற்றி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...