24 66a9d091074c4 1
இலங்கைசெய்திகள்

தமிழர்களுக்கு காணி, காவல்துறை அதிகாரம் வழங்க முடியாது : நாமல் திட்டவட்டம்

Share

தமிழர்களுக்கு காணி, காவல்துறை அதிகாரம் வழங்க முடியாது : நாமல் திட்டவட்டம்

சிறிலங்கா அரசியல் அமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவதற்கு பொதுஜன பெரமுன எதிர்ப்பை வெளியிடுவதாக நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த விடயத்தை தெற்கைப் போன்றே வடக்கிலும் சென்று கூறி வருகிறேன். சில தரப்பினரைப் போன்று வடக்கில் ஒன்றையும் தெற்கில் ஒன்றையும் நாங்கள் பேசப் போவதில்லை.

இதனால் வடக்கின் சில அரசியல் கட்சிகளினால் எம்முடன் இணைந்து செயற்பட முடியவில்லை. வடக்கின் ஒரு தொகுதி இளைஞர்கள் தற்பொழுது காணி, காவல்துறை அதிகாரம் என்ற கோரிக்கையை கைவிட்டுள்ள நிலையில், தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் தற்பொழுது எங்களுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

எதிர்வரும் தேர்தல்களில் வடக்கினை பிரதிநிதித்துவம் செய்து சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை உருவாக்குவது எமது இலக்கு.

அவ்வாறு தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கலாம், ஒரு காலத்தில் அவர் பிரதமராகவோ ஜனாதிபதியாகவோ கூட பதவி வகிக்கலாம்.

இதேவேளை, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பிரதான எதிராளி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவே (Sajith Premadasa) ஆவார்.

அத்துடன் எமது கட்சியிலிருந்து விலகி வெளியேறியவர்களை பிரதான சவாலாகவோ எதிராடிகளாகவோ கருதவில்லை“ என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...