இலங்கைசெய்திகள்

தமிழர்களுக்கு காணி, காவல்துறை அதிகாரம் வழங்க முடியாது : நாமல் திட்டவட்டம்

Share
24 66a9d091074c4 1
Share

தமிழர்களுக்கு காணி, காவல்துறை அதிகாரம் வழங்க முடியாது : நாமல் திட்டவட்டம்

சிறிலங்கா அரசியல் அமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவதற்கு பொதுஜன பெரமுன எதிர்ப்பை வெளியிடுவதாக நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த விடயத்தை தெற்கைப் போன்றே வடக்கிலும் சென்று கூறி வருகிறேன். சில தரப்பினரைப் போன்று வடக்கில் ஒன்றையும் தெற்கில் ஒன்றையும் நாங்கள் பேசப் போவதில்லை.

இதனால் வடக்கின் சில அரசியல் கட்சிகளினால் எம்முடன் இணைந்து செயற்பட முடியவில்லை. வடக்கின் ஒரு தொகுதி இளைஞர்கள் தற்பொழுது காணி, காவல்துறை அதிகாரம் என்ற கோரிக்கையை கைவிட்டுள்ள நிலையில், தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் தற்பொழுது எங்களுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

எதிர்வரும் தேர்தல்களில் வடக்கினை பிரதிநிதித்துவம் செய்து சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை உருவாக்குவது எமது இலக்கு.

அவ்வாறு தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கலாம், ஒரு காலத்தில் அவர் பிரதமராகவோ ஜனாதிபதியாகவோ கூட பதவி வகிக்கலாம்.

இதேவேளை, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பிரதான எதிராளி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவே (Sajith Premadasa) ஆவார்.

அத்துடன் எமது கட்சியிலிருந்து விலகி வெளியேறியவர்களை பிரதான சவாலாகவோ எதிராடிகளாகவோ கருதவில்லை“ என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...