5 49
இலங்கைசெய்திகள்

கொழும்பில் வீட்டிலிருந்து தமிழ் மாணவன் சடலமாக மீட்பு!

Share

கொழும்பில் வீட்டிலிருந்து தமிழ் மாணவன் சடலமாக மீட்பு!

கொழும்பு(colombo) மாவட்டம், கெஸ்பவை பிரதேசத்தில் தமிழ் மாணவன் ஒருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நகர் பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி கற்கும் 18 வயதுடைய மாணவனே தனது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு நேற்று(22) செவ்வாய்க்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யோகேந்திரன் முகுந்தன் என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

குடும்பத்தினருடனான முரண்பாடு காரணமாக மேற்படி மாணவன் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்திருக்கலாம் என்று காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...