9 3 scaled
இலங்கைசெய்திகள்

தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் நாடு…!

Share

தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் நாடு…!

தமிழ் பேசும் மக்கள் உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

இதன்படி, உலகில் சுமார் 86.4 மில்லியன் பேர் தமிழ் மொழியை நாளாந்தம் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சுமார் 78.4 மில்லின் மக்களின் தாய்மொழியாக தமிழ் மொழி இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, அதிகளவான தமிழ் பேசும் மக்கள் வாழும் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த தரவரிசையில் இலங்கை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதுடன், மலேசியா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன.

எனினும், இதில் தமிழ் மொழியை சுமார் 69 மில்லியனுக்கும் அதிகமானோர் பேசுகின்றனர்.

இதையடுத்து, 3 மில்லியனுக்கும் அதிகமானோர் இலங்கையில் தமிழ் மொழியை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பௌத்த நாடென பலராலும் கூறப்படும் இலங்கையில், 15.40 வீதமானோர் தமிழ் மொழியை பேசுவதாக தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதனை தொடர்ந்து, மலேசியாவில் உள்ள சுமார் 2 மில்லியனுக்கும் அதிமான மக்கள் தமிழ் மொழியைப் பேசுவதாக கூறப்பட்டுள்ளது.

மலாய் மற்றும் மாண்டரின் ஆகிய மொழிகள் மலேசியாவில் பேசப்பட்டாலும் அதிகளவானோர் தமிழ் மொழியை பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...